உள்நாடு

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

(UTV | கொழும்பு) – பதினெட்டு சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 8 மணி தொடக்கம் 14 நாட்களுக்கு தமது வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழில் நிபுணர்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சருடன் நேற்றிரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்வதா இல்லையா என்பது குறித்த தீர்மானம் இன்று மாலை எடுக்கப்படும் என சுகாதார தொழில் நிபுணர்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் முன்னதாக தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல் பிரசாரங்கள் திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவு

editor

குணமானோர் எண்ணிக்கை 30,000 இனைக் கடந்தது

8,435 பேருக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!