உள்நாடு

சீனி மோசடி தொடர்பில் விசேட விசாரணை

(UTV | கொழும்பு) – சீனி மோசடி தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி தொடர்பான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வரி வருமானத்தில் 15 பில்லியனுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்த விசாரணைகளுக்காக குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் விசேட கணக்காய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றை ஈடுபடுத்தியுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் கூறியுள்ளார்.

Related posts

ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை

கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கப்படலாம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு