சூடான செய்திகள் 1

சட்டக் கல்லூரிக்கு இவ்வாண்டு 246 பேர் தெரிவு

(UTV|COLOMBO) – 2019 ஆண்டுக்கான சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த பரீட்சைக்கு தோற்றியவர்களில் 246 பேர் சட்டக்கல்லூரிக்கு அனுமதி பெற்றுள்ளதாகவும், பெறுபேறுகளை www.donets.lk என்ற இணையத்தளத்தில் அறிந்துகொள்ள முடியும் எனவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

2019 ஆண்டுக்கான சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கு 4,900 பேர் தோற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய ஒருமைப்பாட்டிற்கு தொடர்ந்து ஆதரவு-ஐரோப்பிய ஒன்றியம்

சட்டமா அதிபரிடம் தீர்ப்பை தாமப்படுத்தாமல் வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை…

ஆளுங்கட்சியினரின் திடீர் தீர்மானம்