சூடான செய்திகள் 1

கோதுமை மாவின் விலையை அதிகரித்த நிறுவனங்களுக்கு சட்ட நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) -கோதுமை மாவின் விலையை அதிகரித்த நிறுவனங்களுக்கு சட்ட நடவடிக்கை என எடுக்கவுள்ளதாக அமைச்சர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார்.

எதுவித சட்ட அடிப்படைகளும் இன்றி, மக்களையும், அரசாங்கத்தையும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் இவ்வாறான நிறுவனங்களின் செயற்பாட்டை ஒரு போதும் அனுமதிக்க முடியாதென அவர் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கோதுமை மா அத்தியாவசிய உணவு பொருளாக உள்ள நிலையில் விலையை அதிகரித்தமை தொடர்பில் சம்பந்தப்பட்ட குறித்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts

விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்ய உத்தரவு

நாட்டில் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கும் வியாழக்கிழமை முதல் கொழும்பில் பிறப்பு சான்றிதழ்

ஆணொருவருடன் 6 பெண்கள் இணைந்து செய்த காரியம்…