உள்நாடு

கொழும்புக்கு நாளை 14 மணித்தியால நீர் வெட்டு

(UTV | கொழும்பு) –  கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (22) முதல் 14 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு 02, 03, 04, 05, 07, 08, 09 மற்றும் கொழும்பு 10 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய கொழும்பு நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியவசிய முன்னேற்றப் பணிகள் காரணமாக நீர் விநியோகத்தை இடைநிறுத்த வேண்டியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இன்றும் 209 பேர் குணமடைந்தனர்

உயர்தரப் பரீட்சையின் போது பாடசாலைகளை மூடுமாறு கோரிக்கை

கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்தில் இடைக்கால தீர்வு நீதிமன்றத்தால் நிராகரிப்பு !