உள்நாடு

கொழும்புக்கு 18 மணித்தியால நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – நாளை காலை 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணி வரை சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டை, கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளில் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

Related posts

தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor

திட்டமிட்டபடி பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்

“எதிர்கால தேர்தல்களில் கூட்டணி இல்லை” – ஸ்ரீ.ல.சு.க