உள்நாடு

கொழும்பு – கம்பஹாவில் சில பகுதிகள் விடுவிப்பு

(UTV | கொழும்பு) –  கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளைக் காலை 5 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாளை(23) காலை 5 மணி முதல் இவ்வாறு தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் பொரள்ள, வெல்லம்பிட்டிய, கோட்டை மற்றும் கொம்பனிதெரு ஆகிய பகுதிகளும் கம்பஹா மாவட்டத்தல் ஜாஎல மற்றும் கடவத்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் 13 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும் எனவும், கம்பஹா மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 293 ஆக உயர்வு

ஹந்தான மலைத்தொடரில் சிக்கியிருந்த மாணவர்கள் மீட்பு!

அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்படமாட்டார் – CID