உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த உதவுங்கள்

(UTV|கொழும்பு) – தேசிய பொறுப்பாக கருதி உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதன் மூலம் நாடு என்ற வகையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்குமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(11) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உலகின் பல்வேறு முக்கிய நாடுகள் கட்டுப்படுத்த முடியாத வகையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுத்துள்ளன. குறித்த நிலையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 669 பேர் கைது

இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பெண்கள்!

ஒரு வாரத்தில் 2,142 டெங்கு நோயாளர்கள்