வகைப்படுத்தப்படாத

கென்யாவில் விமான விபத்து – 5 பேர் உயிரிழப்பு

(UTV|KENYA) கென்யா நாட்டின் வடமேற்கு பகுதியில் நடந்த விமான விபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கென்யாவின் வடமேற்கு பகுதியில் நேற்று காலை மசாய் ஒமாரா பகுதியில் இருந்து லோட்வார் நோக்கி, ஒரு சிறிய ரக விமானம் சென்றுக்கொண்டிருந்த போது, கட்டுபாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொருங்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் வெளிநாட்டவர் என தெரியவந்துள்ளது.

விமானத்தின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கபப்டுகிறது.

மேலும் இந்த விமான விபத்து குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

கொழும்பில் இரண்டு பாதைகளில் போக்குவரத்து மட்டு

சிரியாவில் 580 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்

மாணவர்களை 6 மாதத்தினுள் பல்கலைக்கழகங்களில் உள்வாங்க நடவடிக்கை