சூடான செய்திகள் 1

காற்றுடன் கூடிய நிலைமை மேலும் தொடரும்

(UTV|COLOMBO) நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி , மேல் , தென் , மத்திய , சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கில் இன்றைய தினம் அவ்வப்போது  மழை அல்லது இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும் என அந்த நிலையம் அறிவித்துள்ளது.

அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஓரளவு மழை எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேபோல், நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

கண்டி நகரில் கடும் வாகன நெரிசல்

மே 8 ஆம் திகதி தொடக்கம் மே 14 ஆம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்

குப்பை கண்டேனர்களை திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தல்