உள்நாடு

காணாமல் போன களுத்துறை ஜேசானை தேடும் பொலிஸார்!

களுத்துறை தெற்கு பகுதியில் இருந்து காணாமல் போன 15 வயது ஜேசன் முகம்மட் என்ற சிறுவனை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

ஜேசன் முகம்மட் காணாமல் போயுள்ளதாக ஜனவரி 4 ஆம் தேதி அவரது தாயார் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் பேரில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர் விபரங்கள்:
• பெயர்: ஜேசன் முகமது
• முகவரி: இல. 121/05A, மஃபூர் கிரசென்ட், கலுத்துறை தெற்கு
• உயரம்: சுமார் 5 அடி
• உடல் அமைப்பு: ஒல்லியான தோற்றம்
• முக அமைப்பு: நீளமான முகம்
• முடி: குறுகிய முறையில் வெட்டப்பட்டிருக்கிறது
• தாடி: ஒளிமையாக வளர்ந்துள்ளது
• காணமல்போன போது அணிந்திருந்த உடை: வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை நிற கால்சட்டை

ஜேசன் முகம்மட் தொடர்பாக தகவல் தெரிந்தால் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய அதிகாரியை 071-8591691 என்ற எண்ணிலோ, களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தை 034-2222222 / 034-2222223 என்ற எண்களில் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வீடுகளை உடனடியாக புனரமைத்து, மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு ஜீவன் தொண்டமான் பணிப்புரை

2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை

சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!