சூடான செய்திகள் 1

களுகங்கை பெருக்கெடுக்கும் அபாயம்

(UTVNEWS|COLOMBO) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களுகங்கை பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதால் அதனை அண்மித்து வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக புளத்சிங்கள, பாலிந்தநுவர, கிரியெல்ல, இங்கிரிய, மதுராவல ஆகிய பிரதேச செயலகங்களில் தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளது.

களுகங்கையில் இரத்தினபுரி நீர் அளவிடும் இடத்தில் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வந்தாலும், எல்ல மற்றும் மில்லகந்தை நீர் அளவிடும் இடங்களில் நீர் மட்டம் படிப்படியாக அதிகரித்து வருவதாக அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

பனிமூட்டம் காரணமாக போக்குவரத்தில் சிக்கல்-அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் வேண்டுகோள்

மைத்திரிபால செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு!

10வது சந்தேகநபர் அப்துல்லாஹ்வின் விளக்கமறியல் காலம் நீடிப்பு