உள்நாடு

களனி பல்கலைகழக 9 மாணவர்களுக்கு பிணை

(UTV|கொழும்பு) – களனி பல்கலைகழக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த பல்கலைகழக 9 மாணவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் மஹர நீதவான் நீதி மன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டபோது, சந்தேக நபர்கள் ஒன்பது பேரும், தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.

22, 23 மற்றும் 25 வயதுகளை உடைய 9 மாணவர்கள் கிரிபத்கொட பொலிஸாரினால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், குறித்த வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி வரை மஹர நீதவான் நீதி மன்ற நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

Related posts

மஹர சிறைச்சாலை கலவரம் – 7 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன

ஊரடங்கு சட்டத்தை மீறிய 513 பேர் கைது

பெப்ரவரி 04 – தமிழர் தேசத்தின் கறுப்புநாளிற்கான அழைப்பு !