உள்நாடு

களனி கங்கையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருப்புப் பாலத்திற்கு அருகில் களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பேலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, நேற்று (26) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்த நபர் சுமார் 50 வயதுடைய 5 அடி 6 அங்குலம் உயரம் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது தலைமுடி ஒரு அங்குலம் வரை வளர்ந்திருந்ததாகவும், நீல நிற T-Shirt (டி-சர்ட்) அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் சற்று சிதைவடைந்த நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பிள்ளையானின் கடந்த காலத்தை ஆதாரங்களுடன் CIDயிடம் வெளிப்படுத்திய முன்னாள் சகா ஹுசைன்!

Shafnee Ahamed

இன்று முதல் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

editor