உள்நாடு

கந்தகாடு கைதியின் மரணம் தொடர்பில் 04 இராணுவத்தினர் கைது

(UTV | பொலன்னறுவை) – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவரின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றிய நான்கு இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ மற்றும் விமானப்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைதிகளை கொடூரமாக தாக்கியதாக சந்தேகிக்கப்படும் சில மூங்கில் தாள்கள் மற்றும் தடிமனான மின்சார கம்பிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படும் இளைஞனின் சடலம் அவரது இளைய சகோதரர் மற்றும் நண்பர்களினால் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

“14 மூளைகள் இருந்தாலும் இந்த நெருக்கடியில் இருந்து வெளியேறுவது கடினம்”

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

பிரதமரின் உத்தியோக இல்லம் முன்பாக அமைதியின்மை [PHOTOS]