உள்நாடுபிராந்தியம்

கட்டுப்பாட்டை இழந்த வேன் மரத்தில் மோதி விபத்து – பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்

குருவிட்ட பொலிஸ் பிரிவின் அடவிகந்த பகுதியில் இன்று (03) காலை வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகிலுள்ள மரத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து நடந்த நேரத்தில், 11 முதல் 14 வயதுக்குட்பட்ட 14 பாடசாலை மாணவர்களும், ஒரு பெண்ணும் வேனில் பயணம் செய்துள்ளதுடன், விபத்தில் காயமடைந்த 14 பாடசாலை மாணவர்களும் வேனின் சாரதியும் சிகிச்சைகளுக்காக எரத்த கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 10 மாணவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், இரண்டு மாணவர்களும், இரண்டு மாணவிகளும் வேனின் சாரதியும் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

இலங்கைக்கு ஒரு வாரத்தில் இரு விமான சேவைகள் ஆரம்பம்!

நிதி நிறுவனங்களை ஒழுங்கு படுத்த புதிய அதிகார சபை!

மற்றுமொரு சிறுமி துஷ்பிரயோகம் : ஐவர் கைது