உள்நாடு

கட்டுநாயக்கவில் இளம் தாயும் பிள்ளையும் காணவில்லை!

கட்டுநாயக்கவில் இளம் தாயும் பிள்ளையும் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காணாமல் போன பெண் மற்றும் அவரது மகளை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை பொலிஸார் நாடியுள்ளர்.
அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், பெண் மற்றும் அவரது மகள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கவும் என அறிவித்துள்ளனர்.
யசோதா ஹன்சனி என்ற 26 வயதுடைய பெண்ணும் அவரது 04 வயது மகளும் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம் 29 ஆம் திகதி முதல் தனது மனைவி மற்றும் மகள் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தால் 071-859 1639 அல்லது என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – மன்னார் மாவட்டத்தில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு குறித்து சுமந்திரன் கருத்து

editor

இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா

போதைப்பொருட்களுடன் கைதான கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர்!