உள்நாடு

ஓய்வூதிய திணைக்கள உத்தியோகத்தர்கள் என கூறி நிதி மோசடி

(UTV | கொழும்பு) – ஓய்வூதிய திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் என கூறி 5 கோடி ரூபாவிற்கு மேல் மோசடி செய்த நான்கு சந்தேக நபர்களை மாத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களது நிலுவை ஓய்வூதியம் மற்றும் உதவித்தொகையை வழங்க உதவுவதாக கூறி இந்த மோசடியை செய்துள்ளனர்.

அத்தகைய நிலுவையைப் பெறுவதற்கு, குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் மற்றும் அதற்கான கொடுப்பனவுகள் ரொக்கமாகவோ அல்லது தங்கமாகவோ செய்யப்பட்டுள்ளன.

சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் திவுலபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் மேலும் இரு சந்தேக நபர்கள் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்று மின்துண்டிப்பு இல்லை

முல்லைத்தீவில் இளைஞன் அடித்து கொலை

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் ரோமானிய தூதுவர் Steluta Arhire

editor