உள்நாடுசூடான செய்திகள் 1

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நால்வர் நீக்கம்

(UTV|கொழும்பு) – முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்களான அஜித் பீ.பெரேரா, ரோசி சேனாநாயக்க, இம்தியாஸ் பாகிர் மாக்கார், சரத் பொன்சேகா ஆகியோர் ஐக்கிய‌ தேசிய கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று(30) டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

இன்று மாலை கூடும் ஐக்கிய‌ தேசிய கட்சியின் புதிதாக நியமிக்கப்பட்ட செயற்குழு கூட்டமானது ஆரோக்கியமான ஒரு ஆயத்தம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற இலட்சியத்துடன் முன்னேறுவோம்

இலங்கையில் பிறை தென்படவில்லை – புனித ரமழான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்

editor