அரசியல்உள்நாடு

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக இடைநிறுத்தம் – மரிக்கார் எம்.பி

ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சில பிரச்சினைகளின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய தேசிய கட்சி உட்பட கூட்டணியாக பல கட்சிகள் ஒன்றிணையும் போது அதன் தலைவராக சஜித் பிரேமதாசவே நியமிக்கப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் போது அவற்றில் பேசப்படாத விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதற்கு யாருக்கும் உரிமையில்லை. யானை சின்னத்திலோ அல்லது தொலைபேசி சின்னத்திலோ உத்தேச தேர்தல்களில் போட்டியிடாமல், புதிய சின்னத்தில் போட்டியிடப் போவதாக அவர்கள் எவ்வாறு கூறலாம்?

உண்மையில் இது ஐக்கிய தேசிய கட்சியுடனான இணைவு அல்ல. ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்கு வங்கியுமில்லை.

மோசடியாளர்களுடன் அல்லது வாக்கு வங்கி அற்றவர்களுடன் இணைவதாக இதனை குழப்பிக் கொள்ள தேவையில்லை என்றார்.

-எம்.மனோசித்ரா

Related posts

மின் – வலுசக்தி பிரச்சினை மீது இன்று விவாதம்

ஜனாதிபதியாக ரணில் பதவியேற்று ஒருவருடம் பூர்த்தி

பயணக்கட்டுப்பாடு திங்கள் நீக்கப்படின், மாகாணங்களுக்கு இடையில் பொதுப் போக்குவரத்து