உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ.தே.க. உறுப்பினர்கள் இடைநீக்கம் : மனு நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – கட்சி உறுப்பினர்களின் 99 பேரை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி எடுத்த முடிவுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என முன்வைக்கப்பட்டிருந்த மனுவினை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று(22) நிராகரிப்பு செய்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கீழ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த 99 ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்க ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு அண்மையில் முடிவு செய்தது.

இந்நிலையில் அக்கட்சியின் செயற்குழு எடுத்த முடிவினை தடுத்து இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மனு ஓன்றினை தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எட்டு உயிர்களை காவுவாங்கிய பாதை – அரச அதிகாரிகள் இன்னும் கண்டுக்கொள்ளவில்லை – பாராளுமன்றத்தில் அஷ்ரப் தாஹிர்

editor

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை

இஸ்ரேல்-பலஸ்தீன் போரால் காசாவில் வைத்தியசாலைகள் நிரம்பி வழிகிறது!