உள்நாடு

எரிவாயு கப்பலின் வருகை மேலும் 3 நாட்கள் தாமதம்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு நாளைய தினம் (06) வரவிருந்த 3,700 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்ட கப்பல் மேலும் 3 நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 9ஆம் திகதி கப்பல் நாட்டுக்கு வரவுள்ளது.

மேலும், எரிவாயு அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் எதிர்வரும் 11 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாட்டுக்கு வரவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனம் உலக வங்கியுடன் 100,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதுடன், இது தொடர்பில் இந்த எரிவாயு பங்குகள் இலங்கைக்கு வரவுள்ளன.

Related posts

இலங்கை எனும் பாசமிகு குழந்தையை அநுரவிடம் ஒப்படைக்கிறேன் – ரணில்

editor

இன்று முதல் ஒரு வாரத்திற்கு பொது முடக்கம்

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி