உள்நாடு

எட்டு மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக மழைவீழ்ச்சி காலி யக்கலமுல்ல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக நாளை காலை 10.30 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ளது.

இதன்படி, கேகாலை, இரத்தினபுரி, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் மண்சரிவு அபாயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சீரற்ற காலநிலையினால் மண்சரிவு அபாயம் குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

ஈ.டி.ஐ நிறுவன பணிப்பாளர்கள் நால்வர் ஆணைக்குழுவில்

ஜப்பானில் இருந்து 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

7.5மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டு, விடுதலையானார் அலி சப்ரி!