உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வேட்பாளர்களுக்கான விசேட அறிவித்தல்

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் தேதிகளில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையும் நடைபெறும் என்பதால், வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும் அனைத்து வேட்பாளர்களும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று (14) பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு வேட்பாளரும் இதுபோன்ற இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் சட்டத்தை கடுமையாக அமல்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்குப் பிறகு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் நிறைவடையும் என்றும், குறித்த திகதிக்குப் பின்னர் எந்தவொரு அணிவகுப்பு, வாகனப் பேரணி அல்லது ஒன்றுகூடல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 ஆம் திகதி முதல் மார்ச் 26 ஆம் திகதி வரை நடைபெற உள்ளதால், அதுவரை பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எதிராக எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் தெளிவுறுத்தினார்.

Related posts

இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா களமாக மாற்ற முடியும் – ஜனாதிபதி அநுர

editor

துருக்கியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் இரங்கல் நிகழ்வு

தேங்காய் இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்

editor