வணிகம்

உள்நாட்டுக் கிழங்கு வகைகளை பிரபல்யப்படுத்த நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – காலி மாவட்டத்தில் உள்நாட்டுக் கிழங்கு வகைகளை பிரபல்யப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மொனறாகலை விவசாய நாற்று பயிர்ச்செய்கை மத்திய நிலையத்தில் விருத்தி செய்யப்பட்ட உயர்தரமான இராசவள்ளிக்கிழங்கு வகைகள் காலி மத்திய விவசாய வலயத்தில் பயிரிடப்படும்.

தெரிவு செய்யப்பட்ட 150 விவசாயக் குடும்பங்களுக்கு இவ்வாறான நாற்று வகைகள் வழங்கப்பட்டதாக லபுதூவ பிரதி விவசாயக் காரியாலயம் தெரிவித்துள்ளது.

கிராமிய விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கச் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் மற்றுமொரு நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்படுகின்றது.

Related posts

அத்தியவசியமற்ற பொருட்கள் இறக்குமதி இடைநிறுத்தம்

உணவு வகைகளில் உள்ள போஷாக்கு தரத்தை உறுதி செய்ய நடவடிக்கை

8 இலட்சம் ஹெக்டேயரில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளத்தீர்மானம்