திருக்கோவில் பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் (04) திருக்கோவில் பொலிஸ் பிரிவின் மண்டலா பகுதியில் பசு ஒன்றைச் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் குறித்த நபரை திருக்கோவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திருக்கோவில் 04 இல் வசிக்கும் 26 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.