உள்நாடு

உபேக்ஷா சுவர்ணமாலி கைது

(UTV | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி விபத்து சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி – நுகவெல வீதியில், நுகவெல பிரதேச செயலகத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீது உபேக்ஷா பயணித்த வாகனம் மோதியுள்ளது.

இதனையடுத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட உபேக்ஷா சுவர்ணமாலி இன்று(26) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ரயில்வே ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை! 

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் தடைகள்