உள்நாடு

இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் – 13 பிரதிவாதிகளுக்கும் பிணை [VIDEO]

(UTV|கொழும்பு) – கடந்த 2008-2009 ஆம் ஆண்டில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 13 பிரதிவாதிகளுக்கும் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் கடற்படைத் தளபதியும் அண்மையில் ‘அட்மிரல் ஒப் த ப்ளீட்’ ஆக பதவி உயர்வு பெற்ற வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 13 கடற்படை அதிகாரிகளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கடந்த 22ம் திகதி உத்தரவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடு திரும்பும் இலங்கையர்களின் தனிமைப்படுத்தல் காலம் தொடர்பிலான அறிவிப்பு

மத்திய கிழக்கு நாட்டில் நிலவி வரும் அமைதியின்மை குறித்து வெளியுறவு அமைச்சு அறிக்கை

போக்குவரத்து துறையில் பாரிய மாற்றத்தை மேற்கொள்ளும் ரணில் : இனி மின்சார பேருந்துகளுடன், E- ticketing வசதி