உள்நாடுவணிகம்

இறக்குமதியாகும் உருளைக்கிழங்கு மீதான வரி அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – தேசிய உருளைக்கிழங்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீது விதிக்கப்படும் வரியை அதிகரிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு கிலோ உருளைக் கிழங்குக்கான இறக்குமதி வரி 50 ரூபாவில் இருந்து 55 ரூபாவாக அதிகரிப்பதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விசேட பொருட்களுக்கான சட்டத்தின் கீழ் குறித்த வரி அதிகரிப்பானது நான்கு மாத காலத்திற்கு அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

போதைப்பொருட்களுடன் 685 பேர் கைது

வெள்ளி முதல் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி