உள்நாடு

இருபது வயதுக்கு மேற்பட்டோருக்கு ஃபைசர்

(UTV | கொழும்பு) – 20 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் மூன்றாம் கொவிட் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் 3 மாதங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்ட 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் மூன்றாம் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தடுப்பூசியினை பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள் ஏதெனுமொரு தடுப்பூசி மையத்திற்கு சென்று செலுத்திக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Related posts

வர்த்தக நிலையங்கள் மற்றும் சிற்றூண்டிச்சாலைகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பம்

நாடு பூராகவும் 71 வீதமான வாக்குகள் பதிவு

MV XPRESS PEARL சிதைவுகளை அகற்றும் ஆரம்ப பணிகள் ஆரம்பம்