உள்நாடு

இன்று மின்வெட்டு இல்லை

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக இன்றைய தினமும் மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

கனியவள கூட்டுதாபனத்திடம் இருந்து நேற்று(15) கிடைக்கப்பெற்ற 3,000 மெற்றிக் டொன் டீசல் தொடர்ந்து போதுமானதாக உள்ளமையினால் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்படமாட்டாது இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளரும் பேச்சாளருமான எண்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதிகளவான மின்சார தேவை ஏற்படாவிடத்து எதிர்வரும் செவ்வாய் கிழமைவரை குறித்த எரிபொருள் போதுமானதான இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் எதிர்வரும் செவ்வாய் கிழமை இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளரும் பேச்சாளருமான எண்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையை 4ம் மட்ட எச்சரிக்கை மட்டத்துக்குள் தள்ளியது அமெரிக்கா

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகள் அதிகரிப்பு