உள்நாடு

இன்று கட்சித் தலைவர்கள் கூடுகின்றனர்

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு இன்று(16) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முற்பகல் 11 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

கொரோனா பரவல் நிலைமைக்கு மத்தியில் பாராளுமன்ற அமர்வுகளை நடத்துதல் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அரசுக்கு ஆதரவு வழங்கிய மூவர் எதிர்கட்சியில் அமர்ந்தனர்

கோட்டாவின் வெளிநாட்டு சுற்றுப்பயண செலவுகள் பற்றிய விளக்கம்

முதலாம் தர மாணவர்களை இணைத்து கொள்ளும் தேசிய வைபவம் இன்று