உள்நாடு

இன்று 8 மணி நேர நீர் வெட்டு அமுலில்

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (10) கொழும்பு நகரை சுற்றியுள்ள சில பிரதேசங்களுக்கு 8 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று(10) இரவு 10 மணி முதல் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 12, 13 ,14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதுடன் கொழும்பு 01 மற்றும் 11 ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

பயிர் நிலத்திற்க்கு நீர் இல்லாததால் : விவசாயி எடுத்த விபரீதா முடிவு!

மாலைத்தீவிலிருந்து நாடு திரும்பிய 178 இலங்கையர்கள்