உலகம்

அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கத் தடை

(UTV|அவுஸ்திரேலியா)- .அவுஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தடைவித்துள்ளது.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கறுப்பினத்தவர் மரணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

மெக்ஸ்வெல் முன்வைத்த யோசனைக்கு அமைய ஆசிய விளையாட்டு விழாவில் பட்டாசு வெடிகள் நீக்கம்!

மீண்டும் அதிகரிக்கும் ரூபாவின் பெறுமதி – டொலரின் பெறுமதியில் மாற்றம்!

தனுஷ்க குணதிலக்க குற்றமற்றவர் என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு!