விளையாட்டு

அவுஸ்திரேலிய சென்ற ஏஞ்சலோ மேத்யூஸ் மீண்டும் தாயகம் திரும்பினார்

UTV | COLOMBO – உபாதை காரணமாக வைத்திய சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20 அணித் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏஞ்சலோ மேத்யூஸ் குறித்த உபாதை காரணமாக இந்நாட்களில் நடைபெறும் இலங்கை கிரிக்கெட் நிறுவன இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டிகளில் கண்டி அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில் மேத்யூஸ் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தமது எதிர்ப்பார்ப்பை வெளிப்படுத்தினார் சமரி

நாளைய போட்டியில் களமிறங்கவுள்ள ஆஸி அணியினர்

உலக கிண்ணம் குறித்து கருத்து தெரிவித்த ரிக்கி பொண்டிங்…