உள்நாடு

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்கும் சுற்றுநிருபம் இன்று

(UTV | கொழும்பு) – அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் சுற்றுநிருபம் இன்று (06) வௌியிடப்படவுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

2022 வரவு செலவுத் திட்ட யோசனைக்கமைய இந்த சுற்றுநிரூபம் வௌியிடப்படவுள்ளது.

எவ்வாறாயினும், அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் திட்டத்திற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக இலங்கை நிர்வாக சேவை சங்கம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது.

ஓய்வு பெறும் வயது 62 ஆக காணப்பட வேண்டும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தினூடாக குறித்த சங்கம் இதனை தெரிவித்திருந்தது.

Related posts

முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடுவதற்கு தேசிய மக்கள் சக்திக்கு உரிமை இல்லை – முஜிபுர் ரஹ்மான்

editor

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அநுராதபுரத்திற்கு

editor

உங்கள் நிழல் மறைந்து விடும் – வானியலாளர் அநுர சி. பெரேரா

editor