அரசியல்உள்நாடு

அம்பாறையில் கட்டுப்பணத்தை செலுத்திய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி

2025 இல் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை, நாவிதன்வெளி, இறக்காமம் பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதேச சபையில் தனித்துப் போட்டியிடுவதற்காக அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் காரியாலயத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களினால் நேற்று (12) கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச மத்திய குழு செயலாளர் அஸாறுடீன் சலீம் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச மத்திய குழு உறுப்பினரும் ரிசாட் அன்ட் பிரதர்ஸ் அமைப்பின் ஸ்தாபக தலைவரும் அல் மனார் சமூக சேவை அமைப்பின் தலைவருமான கே.ஆர்.எம்.ரிசாட் அவர்களும் இதில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது .

-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்

Related posts

சீனாவில் இருந்து இலங்கை மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை

என்ன முட்டுக்கட்டை போட்டாலும் தேர்தல் நடந்தே தீரும் – அநுர

மின்சார சபைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள வேண்டுகோள்!