உள்நாடு

அசாத் சாலியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு

(UTV | கொழும்பு) – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலியை இம்மாதம் 25ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

அசாத் சாலி சார்ப்பில் ஆஜராக ஜனாதிபதி சட்டத்தரணி தாக்கல் செய்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை 25 ஆம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளதுடன் அன்றைய தினம் அசாத் சாலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்ததாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையம் குறிப்பிடத்தக்கது.

Related posts

சைகை மொழி தேசிய மொழியாக்கப்பட வேண்டும் – சபாநாயகரை சந்தித்த விசேட தேவையுடைய சங்கங்களின் பிரதிநிதிகள்

editor

ஜெரோம் பெர்னாண்டோவின் பிணை மனு மீதான விசாரணை ஜனவரியில்!

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார்