அரசியல்உள்நாடு

அக்கரைப்பற்றில் ACMC யின் தேர்தல் பிரச்சார காரியாலயங்களை திறந்து வைத்தார் ரிஷாட் எம்.பி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான காரியாலயங்கள் திறப்பு விழாவும், முதலாவது மக்கள் சந்திப்பும் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த காரியாலயங்களை திறந்து வைத்தார்.

இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் உட்பட முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள், உலமாக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

Related posts

மறுசீரமைக்கப்படும் இலங்கை மின் சார சபை

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு விடுதலை

ரோஹிங்கியா அகதிகளுக்காக எடுக்கப்படும் மனிதாபிமான தீர்மானத்திற்கு ஆதரவு – சஜித் பிரேமதாச

editor