நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று (09) முற்பகல் திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இன்னும் ஒரு சில மணித்தியாலங்களில் மின்சாரம் வழமைக்கு கொண்டுவரப்படும் எனவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.