உள்நாடு

O/L பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர்

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் செப்டெம்பர் மாதம் வெளியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கடந்த இறுதி வாரத்தில் செய்முறைப் பரீட்சைகள் நிறைவடைவடைந்துள்ளது. விடைத்தாள்கள் திருத்தப் பணிகளும் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், செப்டம்பர் மாதத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மாதங்களுக்குள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கடினமான நேரத்தில் இலங்கைக்கு உதவுவதாக IMF உறுதி

தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையத்தில் இருந்து 201 பேர் வீடுகளுக்கு

மேலும் மூவர் பூரண குணம்; குணமடைந்தோர் 59