உள்நாடு

MV X-Press Pearl : பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கான இழப்பீடு வழங்கல் இன்று

(UTV | கொழும்பு) – கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் MV X-Press Pearl கப்பலினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கை இன்று (15) ஆரம்பமாகின்றது.

9,883 மீனவக் குடும்பங்களுக்கு இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் நீர்கொழும்பு, வத்தளை, ஜா-எல, கட்டான ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மீனவக் குடும்பங்களுக்காக 5,000 ரூபா இழப்பீட்டை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் 6,042 குடும்பங்களும் வத்தளையில் 1,409 குடும்பங்களும் கட்டானையில் 233 குடும்பங்களும் ஜா-எலயில் 69 குடும்பங்களும் இந்த இழப்பீட்டுத் தொகையை பெறவுள்ளனர்.

இதற்காக 50 மில்லியன் ரூபா நிதி தமக்கு கிடைத்துள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

51சதவீதமான வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும்என்ற நிலைமைகள் உருவாகின்றபோதே அறிவிப்பேன் – தம்பிக்க

அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் [2021.05.03]

தற்போது அரசியல் பழிவாங்கல்கள் அதிகரித்துள்ளது – சஜித் பிரேமதாச

editor