உள்நாடுசூடான செய்திகள் 1

IGP தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான மனுக்கள் விசாரணை!

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய தேசபந்து தென்னகோன், பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமை மனுக்களின் விசாரணைக்கான திகதியை உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

இந்த மனுக்கள் இன்று (24) பிரீதி பத்மன் சூரசேன, யசந்த கோடகொட, ஏ.எச்.எம்.டி. நவாஸ்ஷிரான் குணரத்ன மற்றும் அச்சலா வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்பு அழைக்கப்பட்டது.

பிரதிவாதி தேசபந்து தென்னகோன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்து, தனது கட்சிக்காரர் பொலிஸ் மா அதிபராக தனது கடமைகளைச் செய்வதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்த மனுவை விரைவாக விசாரிக்க திகதியை வழங்குமாறு அவர் நீதிமன்றத்தை கோரினார்.

முன்வைக்கப்பட்ட விவாதங்களைக் கருத்தில் கொண்டு, ஐந்து நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, தொடர்புடைய மனுக்களை மே 6, 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் விசாரணைக்கு ஒத்திவைத்தது.

பேராயர்மால்கம் ரஞ்சித், இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் பிற கட்சிகளால் ஒன்பது அடிப்படை உரிமை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கான அரசியலமைப்பு சபையின் பரிந்துரைகள் சட்டத்துக்கு முரணானவை என்று மனுதாரர்கள் கூறுகின்றனர். 

அதன்படி, அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கும் முடிவு சட்டத்துக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

Related posts

ஆசிரியர் சேவை சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்

‘நாட்டின் இளைஞர்கள் தற்போதைய அரசியலை வெறுக்கிறார்கள்’

வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 20 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால்!