உள்நாடு

CEYPETCO விலை அதிகரிக்கும் தீர்மானமில்லை

(UTV | கொழும்பு) –  சிபெட்கோ எரிபொருள் விலையை அதிகரிப்பது குறித்து இதுவரையில் தீர்மானம் எட்டப்படவில்லை என சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அனைத்து வகையான பெற்றோலை லீட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயாலும், அனைத்து வகையான டீசலையும் லீட்டர் ஒன்றுக்கு 75 ரூபாயாலும் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா இந்தியன் ஒய்ல் (LIOC) அதிகரித்துள்ளது.

அந்தவகையில், 92 ஒக்டேன் பெற்றோலின் விலையானது லீட்டர் ஒன்றுக்கு 338 ரூபாயாகக் காணப்படுவதுடன், ஓட்டோ டீசலின் விலையானது லீட்டர் ஒன்றுக்கு 289 ரூபாயாகக் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டில் இன்றும் மின்வெட்டுக்கு சாத்தியம்

“மூன்றாம் தரப்பினரிடம் இருந்து எரிபொருளை வாங்க வேண்டாம்”

கொரோனா தொற்று – அபாய வலய நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 16ஆவது இடம்