அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – யோஷித ராஜபக்ஷ கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெலியத்த பகுதியில் வைத்து இன்று (25) காலை அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

கைது தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் யோஷித ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த ஜனவரி 03 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலமொன்றை பெற்றுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அநுராதபுரத்தை மீண்டும் உலக பிரசித்தி பெற்ற நகரமாக மாற்றுவதற்கான செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதி

கொரோனா – ஜனாதிபதி செயலணி அவசர விசேட கலந்துரையாடல்

இலங்கையிலிருந்து குவைட்டுக்கு பணிபுரியச் சென்ற 41 இலங்கையர்கள் நாடு திரும்பினர்