அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கைது

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு வெள்ள நிவாரணத்திற்காக அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 6.1 மில்லியன் ரூபாய் நிதி உதவியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரைத் தவிர, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக மேலும் 6 பேரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.

Related posts

மருத்துவ அலட்சியம் : கம்பஹா வைத்தியசாலையில் பிறந்த குழந்தை ஊனமுற்றது

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 581 ஆக உயர்வு

அரசாங்கம் வாய் பேச்சோடு நிற்கின்றனர் – நடவடிக்கைகள் ஏதும் இல்லை – சஜித் பிரேமதாச

editor