கிசு கிசு

உயிராபத்தைக் காட்டி என் பயணத்தை நிறுத்த முடியாது

(UTV|COLOMBO)-எங்களைச் சிறையில் போட்டு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றதோ தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தங்களுக்கும் தங்களது குடும்பத்துக்கும் உயிராபத்து உள்ளதாக வெளியாகியுள்ள கருத்துக் குறித்து தாங்கள் என்ன கருதுகின்றீர்கள் என அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபுர்வ இல்லத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டார்.

நான் உயிராபத்துக்கு அஞ்சி கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருப்பேன் என்று யாரும் நினைப்பார்களாக இருந்தால், அது தவறானது எனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. மேலும் சுட்டிக்காட்டினார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

“மஹிந்தவை பதவி நீக்கியதே தனது அரசியல் வாழ்க்கையில் மிகவும் கடினமான தீர்மானம்”

சமந்தா நடிக்க கணவர் தடையா?

சர்வதேசத்திற்கு பயந்து ‘புர்கா’ தள்ளிப்போனதா?