விளையாட்டு

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி இன்று

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இருபதுக்க 20 கிரிக்கட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டிக்கான தென்னாப்பிரக்க அணியில் ஹசிம் அம்லா மற்றும் ககிசோ ரபாடா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டிக்கான இலங்கைக் குழாமில் ஏலவே அறிவிக்கப்பட்டிருந்த ஜெஃப்ரி வண்டர்சாய் மற்றும் செஹான் மதுசாங்க ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பதிலாக இசுரு உதான மற்றும் கசுன் ராஜித்த ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையில் இதுவரையில் இடம்பெற்ற 9, 20க்கு20 போட்டிகளில் ஐந்தில் தென்னாப்பிரிக்காவே வென்றுள்ளது.

அவற்றில் 3 போட்டிகள் இலங்கையில் இடம்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

QATAR FIFA2022 கால்பந்து சாம்பியன் அணிக்கு பரிசுத்தொகை எத்தனை கோடிகள் தெரியுமா?

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் கார்லோஸ்

சுதந்திர கிண்ணக் கிரிக்கட் தொடருக்கான டிக்கற் விற்பனை ஆரம்பம்