சூடான செய்திகள் 1

தேசிய கணக்காய்வு அறிக்கை தொடர்பான இரண்டாம் கட்ட விவாதம் பாராளுமன்றில் இன்று

(UTV|COLOMBO)-தேசிய கணக்காய்வு அறிக்கை தொடர்பான இரண்டாம் கட்ட விவாதம் இன்று (05) நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய நாள் முழுவதும் இது தொடர்பான விவாதம் நடைபெற உள்ளதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இன்று (05) காலை 10 மணியளவில் பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தேசிய கணக்காய்வு அறிக்கையின் இரண்டாம் கட்ட விவாதம் நடைபெற உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாகாண சபை தேர்தலை பிற்போட எந்த வித தேவையும் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரம சிங்க நேற்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பொதுநலவாய அமைப்பு இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு

நியூஸ்லாந்து அணி பயணித்த பேருந்து: மலைப்பகுதியில் நடந்தது என்ன? (video)

39 நாடுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவிருந்த விசா நிவாரணம் இரத்து