சூடான செய்திகள் 1

ரங்கே பண்டாரவின் மகன் செலுத்திய வாகனம் விபத்து

(UTV|COLOMBO)-இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார செலுத்திய கெப் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் யசோத ரங்கே பண்டார உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கெப் வண்டி இன்று அதிகாலை 12.45 அளவில் புத்தளம் ஆராச்சிக்கட்டுப் பகுதியி்ல் மதிலொன்றை உடைத்துக் கொண்டு வீடொன்றுக்குள் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் சிகிச்சைகளை பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். எனினும் யசோத ரங்கே பண்டார உள்ளிட்ட இருவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக பொலிஸார் கூறினர்.

விபத்து இடம்பெற்ற போது இராஜாங்க அமைச்சரின் மகன் மதுபோதையில் இருந்தாரா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் – அமைச்சர் பந்துல

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தியில் அதிகரிப்பு

நவம்பர் 14 ம் திகதி பாராளுமன்றம் கூடுகிறது !